உயிரி-விலங்கியல் பாடம்-3, இனப்பெருக்க நலன் உத்திகள்

இனப்பெருக்க நலனின் தேவை, பிரச்சனைகள் மற்றும் உத்திகள்:


குடும்ப நலத் திட்டத்தை முதலில் நடைமுறைப் படுத்திய சில நாடுகளில் நம் இந்திய நாடு முதன்மையானதாகும். 1951 ஆம் ஆண்டுதொடங்கப்பட்ட இத்திட்டம், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்படுகின்றது.
இத்திட்டம் "இனப்பெருக்க மற்றும் குழந்தை நலம் பாதுகாப்பு" (RCH) என அழைக்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பெரும் பணிகளாவன...
+ உடல் நலம் மிக்க சமுதாயத்தைக்கட்டமைக்கத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மருத்துவ உதவி அளித்தல்.
+ விடலைப்பருவம் மற்றும் விடலைப் பருவம் சார்பான மாற்றங்கள் பற்றிய தகவல்களைத் தரும் பாலியல் கல்வியை பள்ளிகளில்
கொண்டு வருதல்.
+ தம்பதியர் மற்றும் திருமண வயதினர்க்கு குடும்ப கட்டுப்பாடு விதிகள் மற்றும் பிறப்புக் கட்டுபாட்டு முறைகள் பற்றி அறிவுறுத்தல்.
+ கர்ப்பமடைந்த பெண்கள் பாதுகாப்பு, மகப்பேற்றுக்குப் பிந்தைய தாய்-சேய்
பாதுகாப்பு மற்றும் தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
+ அரசு மற்றும் அரசு சாரா முகவாண்மைகளுக்கு ஆதரவு அளித்து இனப்பெருக்கம் சார்ந்த புதிய முறைகளைக் கண்டறிந்து நடைமுறையிலுள்ள
குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்த ஊக்கமளித்தல்.

  • மாபெரும் குழந்தைகள் தடுப்பூசித் திட்டம், 
  • கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குதல், 
  • ஜனனி சுரக்ஷா யோஜனா (Janani suraksha yojana), 
  • ஜனனி சிசு சுரக்க்ஷா கார்யகரம் (Janani Shishu Suraksha Karyakaran),
  • ஒருங்கிணைந்த இனப்பெருக்க, தாய், சேய், வளர்குழந்தை மற்றும் பதின்
  • பருவத்தினருக்கான ஒருங்கிணைந்த ஆரோக்கிய அணுகுமுறை (RMNCH+A),
  • பிரதமரின் சுரக்ஷிட் மட்ரிட்வா அபியான் (Pradhanmantri surakshit Matritva Abhiyan),
போன்றவை இந்திய அரசால் தேசிய அளவில் நடத்தப்பட்டு வரும் திட்டங்களாகும்.

Comments

Popular posts from this blog

Class XII Bio-Zoology & Zoology - Powerpoint

Class XI - Zoology - Powerpoint

12th Standard, பாடம் - 1, உயிரிகளின் இனப்பெருக்கம்- Book back One word Online test

11ம் வகுப்பு, பாடம் 1, உயிருலகம் - Book back One word Online test